இலங்கை

கோப் குழுவில் ஏற்பட்ட சர்ச்சை !

இலங்கை மின்சார சபையுடன் (CEB) தொடர்புடைய விடயங்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை ட்ரான்ஸ் போர்மர்ஸ் நிறுவனம் (Lanka Transformers Company) நேற்று கோப் குழுவில் ( Committee on Public Enterprises) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், ஒரு தனியார் நிறுவனத்தை குழுவின் முன் அழைத்தது குறித்து அக் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எதிர்ப்பு தெரிவித்ததால், குழுவிற்குள் விவாத நிலைமை ஏற்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்தஅரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர இலங்கை மின்சார சபையின் விசாரணைகளை நிறைவு செய்வதற்கு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நிறுவனம் கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். 

இதன்போது குறித்த தனியார் நிறுவனத்திற்கு கோப் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…