இலங்கை

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி!

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஆற்றில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். 

இறந்தவர் மொன்னேக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் குழாயைப் பயன்படுத்திய மீன்பிடிப்பவர் என்பதுடன், அவர் வீடு திரும்ப தாமதமானதால் குடியிருப்பாளர்கள் அவரைத் தேடியபோது ஆற்றின் நடுவில் அவரது சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் நிக்கவெரட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…