இலங்கை

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

நீதவான் வழங்கிய சில தீர்ப்புகள் குறித்து பொலிஸ் மா அதிபரினால் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இந்த முறைப்பாடு தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணையே இந்த பணி இடைநிறுத்தத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…