இலங்கை

கிரிந்தவில் போதைப்பொருள் – பொலிஸாரின் விளக்கம்

கிரிந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான விளக்கத்தை பொலிஸார் வௌிப்படுத்தியுள்ளனர். 

அதன்படி 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைதாகியிருந்தனர். 

இந்தநிலையில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய 6 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…