இலங்கை

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். 

கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின், நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே ஜேகோப் டி போயர், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெதிவ் ஜோன் டக்வேர்த், அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர் அப்துநோர் ஹொலிஃபி மற்றும் அயர்லாந்து ஜனாநாயகக் குடியரசின் தூதுவர் பெனடிக்ட் ஹஸ்குல்டிசன் ஆகியோர் இவ்வாறு நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். 

அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…