இலங்கை

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். 

கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின், நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே ஜேகோப் டி போயர், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெதிவ் ஜோன் டக்வேர்த், அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர் அப்துநோர் ஹொலிஃபி மற்றும் அயர்லாந்து ஜனாநாயகக் குடியரசின் தூதுவர் பெனடிக்ட் ஹஸ்குல்டிசன் ஆகியோர் இவ்வாறு நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். 

அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…