இலங்கை

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் சபாநாயகர் தலைமையில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. 

இந்த குழுநிலை விவாதமானது இன்று (15) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

இன்றைய தினம் மு.ப. 09.00 – மு.ப. 09.30 மணி வரையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளது. 

மு.ப. 09.30 – மு.ப. 10.00 மணிவரையில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மு.ப. 10.00 – மு.ப. 10.30 வரையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது 

மு.ப. 10.30 – பி.ப. 6.00 மணி வரையில் வரவு செலவு திட்டம் – 2026 – குழு நிலை விவாதம் நடைபெறும். 

பி.ப. 6.00 – பி.ப. 6.30 மணிவரையில் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை முன்வைக்கப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…