இலங்கை

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

இன்றைய (19) பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. 

இதற்கமைய, மு.ப. 09.00 முதல் மு.ப. 09.30 மணிவரையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளன. 

முற்பகல் 09.30 முதல் மு.ப. 10.00 மணிவரையான காலப்பகுதியில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம் மு.ப. 10.00 முதல் மு.ப. 10.30 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களுக்கான நேரம் வழங்கப்பட்டுள்ளது. 

மு.ப. 10.30 முதல் பி.ப. 6.00 மணிவரையில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை விவாதம் நடைபெறவுள்ளது. 

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கான 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் இன்று நடைபெறவுள்ளது. 

இதேவேளை பி.ப. 6.00 முதல் பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…