இலங்கை

வான்கதவுகள் இன்றும்-திறப்பு

தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 19,400 கன அடி நீர் விடுவிக்கப்படுவதாக வாரியபொல பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 3 அங்குல அளவிலும், 4 வான் கதவுகள் 2 அங்குல அளவிலும் திறக்கப்பட்டுள்ளன. 

இதிலிருந்து வினாடிக்கு 3,720 கன அடி நீர் மீ ஓயாவிற்கு விடுவிக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…