இலங்கை

ரம்புக்கனையில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது (23) இரவு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விபத்து சம்பவித்துள்ளது. 

தலகொல்ல பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
 

மரம் முறிந்து விழுந்ததினால் முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் உள்ளே சிக்கிய நிலையில், அதிலிருந்த சிறுவன் மீட்கப்பட்டு தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…