இலங்கை

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

அதனுடன் ஒப்பிடுகையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,150 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. 

இதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (25) சுமார் 6,000 ரூபா அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு, தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 309,200 ரூபாயாக காணப்படுகிறது. 

நேற்று (24) 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 303,600 ரூபாவாக காணப்பட்டது. 

மேலும் நேற்றைய தினம் 330,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 336,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…