இலங்கை

உதித லொக்குபண்டாரவின் கைத்துப்பாக்கி பொலிஸ் பொறுப்பில்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை நுகேகொட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

அதற்கமைய, அதன் சட்டபூர்வத்தன்மை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடவில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தின் போது, அவரிடம் இந்தத் துப்பாக்கி இருந்ததாகக் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…