இலங்கை

மன்னார் குடிநீர் பாதுகாப்பானது வதந்திகளை நம்ப வேண்டாம்!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இத் தகவல் ஒரு வதந்தி என்பதைச் சபை தெளிவாக அறிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படும் குடிநீரானது பாதுகாப்பான குழாய்க் கிணறுகளில் இருந்தே பெறப்படுகிறது. இந்த நீர் மூலங்கள் மேற்பரப்பு வெள்ளத்தால் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை எனவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தமது ஆய்வுகூடப் பிரிவானது தொடர்ச்சியாக நீரின் தரத்தைப் பரிசோதித்து வருவதாகவும், மன்னார் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது மற்றும் பருக உகந்தது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் இது குறித்து அச்சமடையவோ அல்லது வதந்திகளை நம்பவோ வேண்டாம் என்றும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அனைத்தும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…