இலங்கை

இரத்தினபுரி மாநகர சபை வரவு செலவுத் திட்டம் NPP முயற்சி தோல்வி!

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திலுள்ள இரத்தினபுரி மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (19) தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

இந்த வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் இரத்தினபுரி மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. 

சபையின் 27 உறுப்பினர்களும் இன்றைய அமர்வில் கலந்துகொண்டனர். 

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் எல்.பி. லியனாரச்சி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். 

வாக்கெடுப்பைத் தொடர்ந்து கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், மாநகர முதல்வர் வரிகளை அசாதாரணமான முறையில் அதிகரித்தமை காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகத் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…