இலங்கை

டித்வா புயல் தாக்கம்-3.74 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு!

‘டித்வா’ காரணமாக இலங்கையில் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகத் தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால் மாதமொன்றுக்கு 48 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் 23 சதவீதம் வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதனிடையே, தேயிலைத் துறையில் 35 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், தேயிலை உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை வழங்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இந்த அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…