இலங்கை

வவுனியாவில் கஞ்சா செடி விவகாரம் ஒருவர் கைது!

வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றது. 

அதே பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டது. 

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரகீத் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…