இலங்கை

கரீபியன் விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!

வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து கரீபியன் விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான கண்காணிப்பு தளமான FlightAware இன் படி, JetBlue மிகவும் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விமான நிறுவனம் 209 விமானங்களை இரத்து செய்துள்ளதுடன் மேலும் 263 விமானங்களை தாமதப்படுத்தியுள்ளது.

இதேநேரம், டொமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்காவுக்கான விமானங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மீண்டும் முன்பதிவு செய்யலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறக் கோரலாம் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர் லைன்ஸ் ஆகியவை நேற்று தங்கள் விமானங்களில் 4 வீத விமானங்களை இரத்து செய்துள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…