இலங்கை

டிஜிட்டல் நன்னடத்தை வழிகாட்டல் கோவையினை தயாரிக்க பணிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான கலைத்திட்டங்களைத் தயாரித்தல், பாடப்புத்தகங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை மீளாய்வு செய்யும் அதிகாரிகளுக்காக இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் நன்னடத்தை மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டிக் கோவையொன்றைத் தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

6-13 ஆம் தரங்களுக்கான கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான செயலணியின் இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் நன்னடத்தை மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பணிக்குழுவுடனான கலந்துரையாடலொன்று பிரதமர் தலைமையில் நேற்று (06) அலரி மாளிகையில் நடைபெற்றது. 

அங்கு கருத்து வௌியிடும் போதே, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த பணிப்புரையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…