இலங்கை

நெடுநாள் மீன்பிடி படகுகளில் சிக்கிய பாரியளவான போதைப்பொருள்

தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளிலும் சுமார் 270 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

சந்தேகத்திற்குரிய குறித்த இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் தற்போது கரைக்குக் கொண்டுவரப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…