இலங்கை

தீகல சமனின் 2 கோடி பெறுமதியான வீடு முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறையில் உள்ள தீகல சமன் எனப்படும் அஜித் பெரேரா என்பவரின் சொகுசு வீடொன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது. 

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குறித்த வீடு, அவிசாவளை, தெஹியோவிட்ட பகுதியில் அமைந்துள்ளது. 

அந்த வீட்டை அவர் தனது கள்ளக்காதலிக்கு கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரால் அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக பணம் பெற்ற வழியை தெளிவுபடுத்த முடியாமல் போனதால், அது போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

எனவே குறித்த வீட்டை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…