இலங்கை

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க GMOA கோரிக்கை

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது வீடுகளில் இருந்து தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தரநிலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்கள், கடமைக்காக வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் சுகாதார சேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறு அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…