இலங்கை

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஒரு வார காலத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரையிலான வரம்பிற்குள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். 

இதன்படி, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும். 

இந்த நடைமுறை முறைப்படுத்தப்படும் வரை, பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…