இலங்கை

வைத்தியர்களின் தேவைக்கேற்ப எரிபொருள் வழங்க நடவடிக்கை

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 

சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக் குறிப்பிடும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

“QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் போது, பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் மற்றும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

இன்னும் ஒரு சில நாட்களுக்கு இந்த சிக்கல்கள் இருக்கும், பின்னர் அவை தீர்க்கப்படும். 

நாம் இதனை ஒரு பொதுவான சுற்றறிக்கையாகவே அறிமுகப்படுத்தியுள்ளோம். விசேடமான தொழில் பிரிவுகள் மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபடும் வாகனங்கள் உள்ளன. 

அவை தொடர்பான தனித்தனியான வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும். 

வைத்தியர்கள் என்பவர் ஒரு விசேட தொழிலைச் சேர்ந்தவர்கள். அத்துடன் விசேட அபிவிருத்தி திட்டங்களும் உள்ளன. எனவே, ஒரு நபருக்கோ அல்லது ஒரு வாகனத்திற்கோ வழங்கப்படும் எரிபொருள் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை. 

அவற்றின் விசேட தன்மையை இனங்கண்டு, அதற்கான சுற்றறிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் போது, வைத்தியர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குரிய சுற்றறிக்கைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.” என்றார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…