இலங்கை

கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்ட படகில் 250 கிலோ கொக்கேன்!

பேருவளைக் கடற்பரப்பில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடி படகிலிருந்து 250 கிலோ கிராமிற்கும் அதிக எடையுள்ள கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மீன்பிடிப் படகில் இருந்த 6 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட அந்தப் படகு, இன்று (16) பிற்பகல் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…