இலங்கை

கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்ட படகில் 250 கிலோ கொக்கேன்!

பேருவளைக் கடற்பரப்பில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடி படகிலிருந்து 250 கிலோ கிராமிற்கும் அதிக எடையுள்ள கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மீன்பிடிப் படகில் இருந்த 6 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட அந்தப் படகு, இன்று (16) பிற்பகல் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…