இலங்கை

CCTV -இல் பதிவான தலைக்கவச தாக்குதல்!

குளியாபிட்டிய, மீகஹகொட்டுவ சந்தியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மற்றொரு ஓட்டுநரைத் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


CCTV காட்சிகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குளியாபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குளியாபிட்டிய – பன்னல வீதியிலிருந்து வந்த நபர், குளியாபிட்டியவிலிருந்து மாதம்பே பிரதான வீதி வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தாக்கும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.


குளியாபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நலின் மஹீபால உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…