இலங்கை

கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து!

கொழும்பு -கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தானது இன்று 18 ஆம் திகதி  காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கியிலுள்ள  குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று தீயணைப்பு  வாகனங்கள் தற்போது தீயணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…