இலங்கை

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – சிசிரிவி காணொளி!

வெல்லவாய -மொனராகலை பிரதான வீதியின் வருணகம பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்தில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. 

மீன் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மற்றுமொரு லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மீன் ஏற்றிச் சென்ற லொறியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். 

விபத்து நிகழ்ந்த விதம் அருகில் இருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…