இலங்கை

அமெரிக்க கடற்படை மீது இராணுவத்தின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால், செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதனால், கடந்த ஏப்ரல் 3 அன்று முதல் ஈரானின் துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரானின் வர்த்தகம் மற்றும் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க கடற்படை முடக்குவது, போர்நிறுத்தத்தை மீறியதாகக் கருதப்படும் என ஈரான் இராணுவம் அறிவித்தது.

இந்த முற்றுகைகள் தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் எவ்வித ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை இஸ்லாமியக் குடியரசின் வலிமைமிக்க ஆயுதப் படைகள் அனுமதிக்காது என ஈரான் ,ராணுவத்தின் மூத்த அதிகாரி அலி அப்துல்லாஹி கூறியுள்ளார்.

இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி……

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…