இலங்கை

இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று பிற்பகல் நாட்டிற்கு

இரண்டாவது கச்சா எண்ணெய் (Borethel) கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போர் ஆரம்பமானதன் பின்னர் நாட்டிற்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இதுவாகும்.

இந்தக் கப்பல் மூலம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதன் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூார நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு இன்று வருகை தரும் கப்பலுடன் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…