இலங்கை

கொழும்பில் அமுலாகவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மே 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மே 7 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வியட்நாம் ஜனாதிபதியின் கொழும்பு நோக்கிய வருகையின் போதும், மே 8 ஆம் திகதி முற்பகல் மற்றும் பிற்பகல் ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம், பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களுக்கான உத்தியோகபூர்வ பயணங்களின் போதும் இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்ட நேரங்களில் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம். 

வியட்நாம் ஜனாதிபதியின் வருகைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் குறித்த வழிகளில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை விதிக்கப்படும். 

ஜனாதிபதியின் வாகனத் தொடரணி கடந்து செல்லும் போது ஏனைய வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். 

இதேவேளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…