இலங்கை

சேனவல்லி குளத்தில் மூழ்கி நபர் ஒருவர் பலி

தம்பலகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனவல்லி குளத்தில் மூழ்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் தம்பலகமுவ, அர்பா நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவராவார்.

குறித்த நபர் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, மயக்கமடைந்து நீரில் மூழ்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தம்பலகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…