இலங்கை

துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பிற பொருட்களுடன் இருவர் கைது

தென்னந்தோட்டம் ஒன்றில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் சிறுத்தை தோல், சில துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைத் தங்களது வசம் வைத்திருந்த இரண்டு நபர்கள் வனவிலங்கு திணைக்களத்தின் வனாத்தவில்லுவ உப அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று (17) அதிகாலை வனாத்தவில்லுவ – காட்டுபுளியங்குளம் பகுதியில் வைத்தே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து சிறுத்தை தோல் ஒன்று, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரமற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரமற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று, 05 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் 04 வெற்றுத் தோட்டாக் கூடுகள் ஆகியவற்றை வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…