இலங்கை

24 மணித்தியாலங்களில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவானது!

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நேற்று (21) காலை 8.30 மணி முதல் இன்று (22) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி மையங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொட பகுதியில் 238 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியில் 230 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…