இலங்கை

யாழில் நூதன முறையில் போதைப்பொருள் வர்த்தகம்

யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 1800 போதை மாத்திரைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

இணைய சேவையின் ஊடாக பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதையடுத்து பொதி விநியோக சேவையின் ஊடாக கொழும்பில் இருந்து பொதிசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றுக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர். 

அதில் 1800 போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…