இலங்கை

பருத்தித்துறை கடலில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதியில் இருந்து கடற்றொழிக்கு சென்ற நிலையில் காணாமல் போன 4 மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. 

நான்காவது நாளாக நேற்றும் (31) அவர்கள் தேடப்பட்ட நிலையில், அவர்கள் கண்டறியப்படவில்லை. 

குறித்த மீனவர்கள் கடந்த புதன்கிழமை இரவு கடல் தொழிலுக்கு சென்ற நிலையில் கரைக்கு திரும்பவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதேச மீனவர்களும், கடற்படையினரும் இணைந்து தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களைத் தேடும் பணி நேற்றும் நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…