இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய நபர்


சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். 

சந்தேக நபர் ஹட்டன் – டிக்கோயா சலங்கந்த பகுதியிலிருந்து தினமும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்தி வந்து, பின்னர் பயணித்தின் இடையில் மற்றொரு சாரதிக்கு பேருந்தை ஒப்படைப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பேருந்து ஹட்டன் – சலங்கந்த வழியாக அதிக ஆபத்தான செங்குத்து மற்றும் வளைவுகள் கொண்ட பாதையில் பயணிக்கின்றது. 

இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். 

சம்பவம் தொடர்பில் பேருந்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…