இலங்கை

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி

குருநாகல் – புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்தில் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை ஒருவரே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 

அவர் தனது 5 வயது குழந்தையை கையில் ஏந்தியவாறு வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, புத்தளம் திசை நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் குழந்தையும் உடனடியாக நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழந்துள்ளார். 

காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…