இலங்கை

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக அதன் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார். 

இதன் காரணமாக ரயில்கள் எதுவும் தாமதமாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…