இலங்கை

மோஹினி நீர்வீழ்ச்சி சோகம்: படுகாயமடைந்த 3 மாணவர்களின் தற்போதைய நிலை!

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி/டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் இன்று (22) காலை 8:15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த மூன்று மாணவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதிவேகமாகப் பயணிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லதன்னி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும், அதில் பயணித்த முதியவர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் முச்சக்கர வண்டியில் மொத்தம் 5 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…