No products in the cart.
ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மீன்பிடி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணலை அகற்றும் நடவடிக்கையை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.














