தொழில்நுட்பம்

ஸ்கைப் தளத்தை நிறுத்த முடிவு

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வரும் தொழில்நுட்பங்கள் காலாவதி ஆகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ‘ஸ்கைப்’ தளம் இணைந்துள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்கைப் தளத்தை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்துள்ளது.

இதன் மூலம் 21 ஆண்டுகளாக பயனாளர்களுக்கு இலவச வீடியோ கால் சேவைகளை வழங்கி வந்த ஸ்கைப் தனது சேவையை இறுதியாக நிறைவு செய்ய உள்ளது.

எஸ்டோனியாவை சேர்ந்த 4 மென்பொருள் பொறியாளர்களால் கடந்த 2003-ம் ஆண்டு ஸ்கைப் தளம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ஸ்கைப் கடந்த 2011-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் வந்து சேர்ந்தது.

ஸ்கைப் தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. அதற்கு முன் பயன்பாட்டில் இருந்த விண்டோஸ் லைவ் மெசென்ஜர் தளத்திற்கு மாற்றாக ஸ்கைப் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பயனாளர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் 2023 பிப்ரவரி நிலவரப்படி, தினந்தோறும் 30 கோடியே 60 லட்சம் பேர் ஸ்கைப் தளத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஸ்கைப் தளத்தின் சேவை நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு, அதன் பயனாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளத்தில் கவனம் செலுத்தவும், மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தங்கள் சேவையை மாற்றியமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

What's your reaction?

Related Posts

ஆப்பிள் கையடக்க தொலைபேசி மாடல்களுக்கு வாட்ஸ்அப் நீக்கம்

எதிர்வரும் மே மாதம் முதல் ஆப்பிள் கையடக்க தொலைபேசியின் சில மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது, இதில் பழைய ஆப்பிள் மொபைல் போன்களான…