No products in the cart.
ஜனாதிபதி வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என அறிவிப்பு!
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவ்வாறு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால் அதனை செல்லுபடியற்றதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.














