இலங்கை

உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்த அஜித் நிவார்ட் கப்ரால்!

2012ஆம் ஆண்டு கிரேக்கப் பிணை முறி விவகாரம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை சவாலுக்கு உட்படுத்தி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். 

குறித்த மேன்முறையீடு இன்று (11) அழைக்கப்பட்டதுடன், அதன் உள்ளடக்கங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கிரீஸ் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதை அறிந்திருந்தும், இலங்கைக்குச் சொந்தமான நிதியை அங்குள்ள பிணை முறிவுகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்களத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…