இலங்கை

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 

அதற்கமைய, இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பு அமுலில் இருக்கும் என அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும், ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், இன்றும் வழமை போல் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…