No products in the cart.
தம்பியால் அண்ணன் வெட்டிக்கொலை!
அங்குருவாதொட்ட, பெதிகமுவ கந்த பகுதியில் இன்று (19) அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹல்தொட பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று (18) இரவும் உயிரிழந்த நபர் தனது தாயைத் தாக்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவரைப் மீட்பதற்காக 35 வயதுடைய தம்பி மன்னாக் கத்தியால் அவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.














