No products in the cart.
முன்பிணையில் விடுவிக்குமாறு மஹிந்தானந்த மனுத் தாக்கல்
கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்வதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தரமற்ற கரிம உரத் தொகையை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.