இலங்கை

வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும் ரயில் மார்க்கம்

களனிவெளி ரயில் பாதையில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 09 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை பகுதியளவு மூடப்படும் எனவும் அதே நாளில் இரவு 08 மணி முதல் 18 ஆம் திகதி காலை 05 மணி வரை முழுமையாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…