இலங்கை

சஜித் அணியில் இராஜினாமா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாத்தளை பிரதான அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹாரே, மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் மாகாண அமைச்சர் சம்பிக விஜேரத்ன ஆகியோரும் தங்கள் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியும், பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை நேற்று 23 ஆம் திகதி காலை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம்  அவர் கையளித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…