இலங்கை

சஜித் அணியில் இராஜினாமா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாத்தளை பிரதான அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹாரே, மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் மாகாண அமைச்சர் சம்பிக விஜேரத்ன ஆகியோரும் தங்கள் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியும், பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை நேற்று 23 ஆம் திகதி காலை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம்  அவர் கையளித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…