வணிகம்

ஹட்ச் நிறுவனம், கல்வி அமைச்சுடன் ஒன்றிணைந்து, மின்சாரத்தில் இயங்கும் 100 சைக்கிள் வண்டிகளை கிராமப்புற பாடசாலைகளுக்கு நன்கொடையளித்துள்ளது

வணிகம்ஹட்ச் நிறுவனம், கல்வி அமைச்சுடன் ஒன்றிணைந்து, மின்சாரத்தில் இயங்கும் 100 சைக்கிள் வண்டிகளை கிராமப்புற பாடசாலைகளுக்கு நன்கொடையளித்துள்ளதுMay 26, 2025 – 16:29 -0இலங்கையின் முன்னணி மொபைல் சேவை வழங்குநர்களில் ஒன்றான ஹட்ச் நிறுவனம், நிலைபேணத்தக்க போக்குவரத்து தீர்வுகள் மூலம் மாணவர்களுக்கு வலுவூட்டுவதில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் கீழ், தனது நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அடிச்சுவட்டை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

கல்வி அமைச்சுடன் இணைந்து, பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக, மின்சாரத்தில் இயங்கும் 100 சைக்கிள் வண்டிகளை உத்தியோகபூர்வமாகக் கையளித்து வைக்கும் வைபவத்தை ஹட்ச் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு, 2025 ஏப்ரல் 25 ம் திகதி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

கிராமப்புறங்களில் போக்குவரத்து சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட, குறிப்பாக அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட இந்த முயற்சி, நிலைபேணத்தக்க வழிமுறைகள் மூலம் கல்விக்கான வசதியை எளிதாக்கும் அமைச்சின் தூரநோக்கு இலக்குடன் ஒன்றியுள்ளது.

இலங்கை முழுவதும் கல்விக்கான வசதியை வலுப்படுத்துவதற்கும், சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் ஹட்ச் நிறுவனத்தின் நீடித்த அர்ப்பணிப்புக்கு இந்த செயற்திட்டம் சிறந்ததொரு சான்றாக அமைந்துள்ளது. இந்த வைபவத்தில் பிரதி கல்வி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளதுடன், ஹட்ச் நிறுவனத்தின் பதில் பிரதம நிதி அதிகாரி திரு. ஷகில விஜேசிங்க மற்றும் அமைச்சு மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் கல்வி வசதிக்கான நடைமுறை முட்டுக்கட்டைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஆழமான ஒத்துழைப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. நிகழ்வில் உரையாற்றிய பிரதி கல்வி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:

“மிகச் சரியான காலகட்டத்தில் ஹட்ச் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, பிராந்தியங்களுக்கு இடையே கல்வியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான எங்கள் முயற்சிகளுக்கு நேரடியாக உதவுகிறது. தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு நம்பகமான வழிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதன் மூலம், நாங்கள் தனிப்பட்டவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்ல, நமது தேசத்தின் எதிர்கால வலிமை மீதும் முதலீடு செய்கிறோம். எங்கள் கல்வி முறைமைக்குள் நிலைபேணத்தக்க போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிப்பதில் ஹட்ச் நிறுவனத்தின் ஆதரவை நாங்கள் மிகவும் போற்றுகிறோம்.

இந்த உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி சௌமித்ரா குப்தா கூறுகையில்: “கல்வி மற்றும் நிலைபேற்றியலை மேம்படுத்தும் தேசிய முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தைத் தோற்றுவிக்க ஹட்ச் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

கிராமப்புற சமூகங்களுக்கான கல்வி வாய்ப்புக்களில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கான எங்கள் பரந்த நோக்கத்தின் பிரதிபலிப்பே இந்தத் திட்டமாகக் காணப்படும் அதேசமயம், பசுமையான, நிலைபேணத்தக்க போக்குவரத்து முறைகளையும் ஊக்குவிக்கிறது.

நாட்டில் ஒவ்வொரு குழந்தையும் எவ்விதமான தடைகளும் இல்லாமல் தங்கள் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்புள்ள எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதில் கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த செயற்திட்டம் ஹட்ச் நிறுவனத்தின் பரந்த நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.

இது நிலைபேற்றியல், கல்வி மற்றும் சமூக வலுவூட்டலை வலியுறுத்துகிறது. இத்தகைய முயற்சிகள் மூலம் ஹட்ச் தனது நிறுவன விழுமியங்கள் தொலைதொடர்பாடலுக்கும் அப்பாற்பட்டவை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலைபேணத்தக்க இலங்கையை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள் ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதுடன், தொலைதொடர்பாடல் உள்ளடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பட்டுவருவதுடன், 2023 ம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது. 1997 ம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004 ம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது.

2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது.

சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை ஹட்ச் விரிவுபடுத்தி வருகின்றது.

What's your reaction?

Related Posts

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்…