இலங்கை

கஜமுத்துவுடன் கைதான இருவர்

கொழும்பு – கொம்பெனித் தெரு ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவரை மத்திய கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 170 கிராம் கஜமுத்துவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட கஜமுத்துவுடன் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக கொம்பெனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 31 மற்றும் 27 வயதுடைய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பெனித் தெரு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

வீடொன்றின் மீது விழுந்த பாரிய மரம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதோடு, வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக…